“இடுக்கட் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர்”
தெளிந்த அறிவுடையோர், தான் துன்பப்பட நேர்ந்தாலும், இழிவான செயல்களில் ஈடுபடமாட்டார் என்பது இதன் பொருள்.
இதில் இழிவான செயல் தீய காரியங்களையும் வழிகளையும் குறிக்கும். இதில் கோபம், பொறாமை போன்ற உணர்ச்சிகளும் அடங்கியிருக்கிறது என்று தான் நினைக்கிறேன். இருந்தாலும், உணர்ச்சிகளை எல்லா நேரமும் அடக்க முடியாது தானே? அப்பொழுது நாம் என்ன தீயவர்களா? ஆனால், அதை உணர்ந்தால் நல்லவர்கள் தானே!